Saturday, June 11, 2005

எனக்குப் பிடித்த சமீப கவிதை (மனுஷ்யபுத்திரன்)

வந்துவிட்டது நீ போக
வேண்டிய ரயில்

தண்டவாளங்களில் படபடக்கின்றன
கிழிக்கப்பட்ட பாலிதீன் உறைகள்

யாரோ ஒரு பயணி
சிமெண்ட் பெஞ்சில் விட்டுச் சென்ற
பத்திரிகை
காற்றில்
தன்னைத் தானே வசிக்கிறது

நான் உனக்காகக் கையசைக்கையில்
ஒரு குழந்தை வேறொரு பெட்டியிலிருந்து
என்னை நோக்கிக் கையசைக்கிறது.

(நன்றி: உயிர்மை ஜீன் 2005)

()

ரயில் நிலையத்தில் நான் அன்றாடம் காணக்கூடிய காட்சிகளை சொற்ப வரிகளைக் கொண்டு ஒரு snapshot போல் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய மனுஷ்யபுத்திரனை வியக்கிறேன்.

1 comment:

ஜெ. ராம்கி said...

Prasanna wants to talk to u. Available on 9841798677. Pl. let me know ur contact no. office/residence. Pl. keep my no 94444 53694 with u.